மு(நெல்லை கோபால்) பிணம் தின்னும் கழுகைப்போல், மாதமாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் அலுவலர்களை மிரட்டி பல லட்சம் கல்லாகட்டும் நெல்லைகோபாலுக்கு விரைவில் காப்பு
*பல RTO அதிகாரிகளை மிரட்டி மாதந்தோறும் லட்ச கணக்கில் வசூல் வேட்டை !*
*விரைவில் கைதாகும் போலி பத்திரிகையாளர் நெல்லை கோபால்..!*
*நெல்லை கோபாலுக்கு கப்பம்கட்டும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை...*
எவன் செத்தா எனக்கென்னா எனக்கு தேவை காசு என்ற பாணியில் RTO அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து வரும் பிளாக் மெயில் பத்திரிகையாளர் நெல்லை கோபால் போக்குவரத்து துறையே என் காலுக்கு கீழ் என்று திமிராக பேசி வருபவர், சில RTO அதிகாரிகள் கோபாலுக்கு ஆதரவு தருகிறார்கள்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பு சென்னை K.K. நகரில் வாடகை வீட்டில் குடியேறிய கோபால் அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் வசித்து வருவதால் அந்த வீட்டையயே ஆட்டைய போட திட்டம் போட்டான். அவன் போட்ட திட்டத்திற்கு முட்டு கட்டையாக நின்றவர் ஸ்டார். ரட்சகன் பட இயக்குநர் ப்ரவீன்காந்த், அவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி ஒரு நாள் அவன் வாடகை இருந்த வீட்டு தெருவில் அரிவாளை எடுத்து அவரை கொலை செய்ய துரத்தினான். அவர் அவனிடமிருந்து தப்பித்து K.K. நகர் காவல் நிலையம் சென்று கோபால் மீது புகார் கொடுத்தார். அன்றைய தேதியில் பிரபல வார இதழில் பத்திரிகையாளர் போர்வையில் பட்டாகத்தி பைரவன் என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியாக வந்தது. இது பற்றி தங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சுமார் 30 வருடத்திற்கு முன்பே அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட நினைத்தவன் இந்த பிராடு நெல்லை கோபால் இவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது பணம் உதவி, பொருள் உதவி செய்து காப்பாற்றிய கருணை உள்ளம் கொண்ட நல்ல மனிதரை உடல் நலம் தேறிய பின்பு அவரை தவறாக பேசி வருகிறான். அந்த நல்ல மனிதரை தொடர்பு கொண்டு கேட்ட போது *அவன் நன்றி கெட்டவன்* அவனை பற்றி என்னிடம் ஏதும் கேட்காதீர்கள் என்று சுருக்கமாக பேசி பேச்சை துண்டித்து விட்டார்.
சரி விஷயத்திற்கு வருவோம் பாலை குடித்து ருசி கண்ட பூனையை போல் RTO அலுவலகத்தில் ருசி கண்ட இந்த பிராடு கோபால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு RTO அலுவலகத்திலும் எனக்கு ஒரு பெரிய தொகை தர வேண்டும் என்றும் பின்பு RTO, RTO PA, கண்காணிப்பாளர்கள் என தனித்தனியாக செலான் தரவேண்டும் என்று தனக்கு தானே ஒரு சட்டம் போட்டு ஒவ்வொரு அதிகாரியையும் மிரட்டி வருகிறான். அவன் . உருட்டல் மிரட்டலுக்கு பயந்த பல பேர் அவன் - கேட்ட தொகையை கொடுத்து - வருகிறார்கள்.அதில் சில பேர் சாக்கடையில் கல் எறிந்தால் நம்மேல்தான் படும் என மன வருத்ததுடன் கொடுக்கிறார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் இந்த பிராடு கோபால். இன்னும் சிலர் இவன் பேச்சை கேட்கமால் தர முடியாது என்று கூறிய நேர்மையான அதிகாரிகளை பற்றி தவறான கருத்துகளை எழுதி வருகிறான் என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.
இவனுடைய மிரட்டலுக்கு பயப்படாத நேர்மையான பெண் அதிகாரி பூங்குழலி அவர்களிடம் 08.05.22 அன்று மாதம் ரூ. 5000/- தர வேண்டும் இல்லை என்றால் உன்னை பற்றி தவறாக எழுதுவேன் என மிரட்டியுள்ளான். அன்றே RTO பூங்குழலி MGR நகர் காவல் நிலையம் சென்று இவன் மேல் புகார் கொடுத்தார். இவனுடைய மிரட்டலுக்கு பயப்படாத குளித்தலை மோட்டார் வாகன ஆய்வாளர் வைதேகி அவர்களிடமும் பணம் கேட்டு மிரட்ட அவர்களும் கரூர் மாவட்ட காவல் நிலையத்தில் போலி பத்திரிக்கையாளர் நெல்லை கோபால் பணம் கேட்டு மிரட்டுகிறான் என்று புகார் அளித்துள்ளார். இதே நிலைமை அவனை வளர்த்துவிடும் சில அதிகாரிகளுக்கு வர எவ்வளவு நேரமாகும் சற்று உஷாராக இருந்தால் சரி
25.07.2023 அன்று காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இவன் மட்டுமல்லாது இவனுக்கு ஜால்ரா போட துணைக்கு நான்கு நபர்களை கூட்டி கொண்டு பொதுமக்களுக்கு வகுப்பு எடுக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் முன்பு சத்தமாக பேச அவனை சாமதனப்படுத்தி அறைக்கு அழைத்து பேசியுள்ளார். இனி மேல் அவன் வரமாட்டான் இவன்தான் வருவான் என கூறி புதிய இதழான நமது அரண் இதழை கொடுத்துள்ளான். புதிய இதழை கொடுத்தவுடன் சுதாகரித்துக்கொண்ட ஆய்வாளர் பன்னீர் செல்வம் புதிய இதழுக்கு எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று கூற மீண்டும் கோபால் சத்தமிட உடனே பன்னீர்செல்வம் உங்கள் பிரச்சனையை வெளியே பார்த்து கொள்ளுங்கள். அலுவலகத்திற்குள் கொண்டு வராதீர்கள் என்று கோபமாக பேசி அனுப்பியுள்ளார். இதே நிலைமைதான் விழுப்புரம் அலுவலகத்திலும் நடந்தேறியுள்ளது. இவர்கள் இருவருக்கும் என் தனிப்பட்ட முறையில் நன்றிகள்.
தற்போது இவன் ஒரு புது யுக்தியை கையில் எடுத்துள்ளான். எனக்கு அமைச்சர் சிவசங்கரன், மற்றும் ஆணையர் எல்லாம் நன்கு தெரியும் என அனைத்து RTO அலுவலகத்திலும் கூறி தங்களுக்கு தேவையான பதவி உயர்வு. பணியிடமாற்றம் வேறு எந்த பிரச்சனை என்றாலும் நான் முடித்து தருகிறேன் என்று கூறி ஒரு பெரிய தொகை பேசி வருகிறான்.
இத்தனை பிராடு வேலை செய்யும் நெல்லை கோபால் என்ற தீய சக்தியை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். மேலும் நேர்மையான அமைச்சர். ஆணையர் பெயரை கூறி அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முன்பே இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விரைவில் போக்குவரத்து துறையில் பிளாக் மெயில் பத்திரிகையாளர் நெல்லை கோபாலின் ஆட்டம் முடிவுக்கு வருகின்றது.
*போக்குவரத்து துறை அதிகாரிகள் & பணியாளர்கள் சார்பில் உயரதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.*



