*குமரி. லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி.*- *அதிரடி நடவடிக்கையில் இறங்கிய எஸ் பி.*

*குமரி. லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி.*- *அதிரடி நடவடிக்கையில் இறங்கிய எஸ் பி.*

*குமரி. லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி.*- *அதிரடி நடவடிக்கையில் இறங்கிய எஸ் பி.*

*3 ஆய்வாளர்கள், 8 உதவி/ஆய்வாளர்கள், வெளி மாவட்டத்திற்கு மாற்றம்*

*12 காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார் தனிப்பிரிவில் இருந்து நீக்கம்.*

*காவலர் ஒருவர் பணியிடை நீக்கம்*

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தக்கலை, குளச்சல், இரணியல், ஆகிய காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் 8 உதவி காவல் ஆய்வாளர்கள் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . மேலும் தக்கலை, குளச்சல், நேசமணி நகர், அஞ்சுகிராமம், ஆசாரிபள்ளம் உட்பட 12 காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார் தனிப்பிரிவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேசமணி நகர் காவல் நிலைய காவலர் சதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை குமரி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர் : வீ.வீரராகவன்.